Sunday, April 11, 2010

தமிழ்க் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக பிரபல சட்டத்தரணி சுமந்திரன்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசி யப் பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த இடத்திற்கு பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்படுவார் என்று கூட் டமைப்புத் தலைமைப்பீடம் உறுதி செய் துள்ளது.
நடந்த பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை மாவட் டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 590 ஆகும்.
திருகோணமலை மாவட்டத்தில் கிடைத்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ள சுமார் 32 ஆயிரம் வாக்குகளையும் சேர்த்தால் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment