Wednesday, April 14, 2010

புதிய அமைச்சரவையை அமைப்பதில் அரசுக்குள் எழுந்துள்ளது நெருக்கடி!



புதிய அமைச்சரவையை அமைப்பதில் பெரும் நெருக்கடிகளை அரசு எதிர்நோக்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கொழும்பு,ஏப்,15
புதிய அமைச்சரவையை அமைப்பதில் பெரும் நெருக்கடிகளை அரசு எதிர்நோக்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவையை எதிர்வரும் 21ஆம் திகதி அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளபோதிலும் அமைச்சர் களைத் தெரிவு செய்வதில் அரசுத் தலை மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த அமைச்சரவையில் 103 அமைச் சர்கள் அங்கம் வகித்தனர். இம்முறை அமைச்சரவையை 35அல்லது 40பேர் கொண்டதாக அமைக்க அரசு முடிவு செய் திருந்ததாக முன்னர் தகவல்கள் வெளி யாகியிருந்தன.
இணை அமைச்சர்களாக(குtச்tஞு Mடிணடிண் tஞுணூண்) சிலரை நியமிக்கவும் அரசு ஆலோ சித்து வருவதாகத் தெரியவருகிறது.
தற்போதைய அமைச்சரவையில் உள்ள சிலர் தமக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கவேண்டும் என்று அரசுக்கு நெருக் குதல் கொடுத்து வருகின்றனர் என்றும், இதனால் அரசுக்கு பெரும் இக்கட்டு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறுப்படுகின் றது.
தேர்தலில் தோல்வியுற்ற அமைச்சர்க ளான ரோகித பொகெல்லாகம, பேரியல் அஷ்ரப், அமீர்அலி போன்றோரை தேசி யப் பட்டியல் ஊடாக நியமித்து அமைச் சுப் பதவி வழங்கவேண்டும் என்று ஒரு தரப்பினர் அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாக அறியப்படுகிறது. இத்தகைய நிலைமைகளால் அமைச்சரவை நியமிக்க ஜனாதிபதி பெரும் நெருக்கடியை எதிர் கொள்வதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது

No comments:

Post a Comment