Wednesday, April 14, 2010

நாவலப்பிட்டியில் பாதுகாப்பு தீவிரம் : விசேட அதிரடிப் படை சேவையில்





_
நாவலப்பிட்டிய பகுதிக்கு 400 வீரர்கள் அடங்கிய விசேட அதிரடிப்படை அணியொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பும், தேர்தல் தினத்திலும், அதன் பின்னரும் தொடர்ந்து அரசியல் ரீதியான பல அசம்பாவிதங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து பொலிஸ் மா அதிபர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள மீள் வாக்களிப்பு வரை சிறந்த பாதுகாப்பினை வழங்கும் பொருட்டே மேற்படி அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை மனோ கணேசன், ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், திலும் அமுனுகம உட்படப் பல அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

20ஆம் திகதி இடம்பெறவுள்ள மீள் வாக்களிப்புக்கான பிரசாரப் பணிகளை எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு வரை முன்னெடுக்க முடியும் என்பதனால் அதுவரை இடம்பெறும் அரசியல் கூட்டங்கள் மற்றும் பிரசாரப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விசேட அதிரடிப்படை சேவையாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment