![]() |
பத்திரிகையாளர்களைக் கொன்றது, கொல்ல முயற்சித்தது போன்ற குற்றங்களை முன் வைத்து இராணுவ உளவுத் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
லசந்த விக்கிரமதுங்க கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டமை, ரிவிரா பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னகோன் கொலை முயற்சிக்கு உள்ளாகியிருந்தமை, கீத் நுவார் என்ற மூத்த செய்தியாளரும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களில் மேற்படி இராணுவ உளவுப் பிரிவு வீரர்களுக்குத் தொடர்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முயற்சித்தது தொடர்பாக அவசரகால சட்டத்தின்கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்திருந்தனர் என்றும், தற்போது இவர்கள் விடுவிக்கப்பட்டு, தங்களுடைய முந்தைய பொறுப்புக்களில் மீண்டும் நியமிக்கப்படுவதாகவும் பயங்கரவாத புலன் விசாரணை பொலிஸ் பிரிவினர் கொழும்பு மஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதே குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வேறு சில வீரர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகையாளர் விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக பிரிகேடியர் துமிந்த கெப்பிதிவலன என்ற மூத்த இராணுவ அதிகாரி ஒருவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த விசாரணைகள் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் பொலிசாரிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிபிசி மேலும் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment