Thursday, April 15, 2010

கடந்த வருடம் அரசநிறுவனங்கள் பாரிய நட்டத்தில் - மத்திய வங்கி


சிறீலங்காவில் கடந்த வருடம் அரசநிறுவனங்கள் பல பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 12.3 பில்லியன் ரூபா நட்டமும் சிறீலங்கா எயர்லைன்ஸ் 12.2 பில்லியன் ரூபா நட்டமும், இலங்கை மின்சாரசபை 7 பில்லியன் ரூபா நட்டமும் அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதுதவிர இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், தபால் திணைக்களம் மற்றம் மிஹின் எயார் ஆகிய நிறுவனங்களும் நட்டங்களை பதிவு செய்துள்ளன.

No comments:

Post a Comment