Wednesday, April 14, 2010

வன்னியில் களவு தொடர்பாக சிறீலங்காப்படை மேஜர் கைது

வன்னிப்பகுதியிலிருந்த பொருட்களை களவாடிச்சென்ற சிறிலங்காப் படைத்துறையின் மேஜர் நிலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தை படை அதிகாரி கிளிநொச்சி படைமுகாமில் கடைமையாற்றி வருகின்றார். இந்நிலையில் வன்னிப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்களின் பொருட்களை களவாடிச்சென்று விற்க முற்பட்டபோது சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உந்துருளிகள் மற்றும் கணினிகளை இவர் கொள்ளையடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த படை அதிகாரி கெக்கிராவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment