மன்மோகன் ஷர்மா, சீனத் தலைநகரில் இந்திய தூதரகத்தின் அதிகாரி. 'ரா'வில் இருந்து பிரத்தியேகமாக உளவு பார்க்க அனுப்பிவைக்கப்பட்டவர். 'சீன மொழி படிக்கிறேன்' என்று பெய்ஜிங் அழகியிடம் சரணடைந்தார். இந்திய ரகசியங்கள் எல்லாம் இரண்டாவது 'பெக்'கில் வெளியேறின. சீன அரசால் பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட இந்தப் பெண், லகுவாகப் பிடித்த மீன் - ஷர்மா. இந்தியா தூங்கி எழுந்து அவரைத் திரும்ப அழைப்பதற்குள், பல ரகசியங்கள் அந்தப் பெண்ணின் மடியில்!
2007-ம் ஆண்டு ஹாங்காங்கில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய ரவி நாயர், சீன உளவுத் துறையின் பெண்ணிடம் அம்பேல். பல ரகசியங்கள் கைமாறின. நாயரை அவசரமாக கொழும்புக்கு மாற்றினார்கள்!
உலகின் பல நாடுகளைக் கண்காணிக்கும் 'ரா' அமைப்பில் இருந்த ரபீந்தர் சிங் என்பவர், அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார். அமெரிக்காவைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவர் 'டாலருக்கு' விலை போனார். இவர் மூலம் பல மிக முக்கியத் தகவல்கள் லீக் ஆகின. தாம் கண்காணிக்கப்படுவதை உணர்ந்த சிங், 2004-ம் ஆண்டு நேபாளம் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். இன்று வரை அவரை நாடு கடத்தக் கேட்டும் அமெரிக்கா அசைந்து கொடுக்கவில்லை!
இந்திய பிரதமரின் அலுவலகத்திலேயே சி.ஐ.ஏ. உளவாளிகள் தைரியமாக வலம் வந்தனர். பிரதமராக இருந்த வாஜ்பாய் அணு ஆயுத சோதனை செய்ய இரண்டு முறை குறித்த தேதியும் அமெரிக்காவுக்குத் தெரிந்துபோனது!
பாகிஸ்தானில் 1990-களில் பணியாற்றிய இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவரது சபலத்தை அறிந்து, பாகிஸ்தான் அரசு பல அழகிய பெண்களை சப்ளை செய்து, வளைத்துப் போட்டது. தன் போஸ்ட்டிங் முடிந்து டெல்லி திரும்பிய பிறகும் அவருக்கு பிளாக்மெயில் வரவே... பதவியை ராஜினாமா செய்து ஓடிவிட்டார்!அதுசரி நம்ம விஜயகாந் சார் போல நாட்டைக்காக்கும் உளவுத்துறை அதிகாரிகள் யாருமே இல்லையா?
சமீபத்தில் வந்த பெண்மணியை விட்டு விட்டீர்கள்.
ReplyDeleteரா வோடு ரா வா என்ன காரியம் செய்கிறார்கள்.