Wednesday, May 12, 2010

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் இளைஞன் கடத்தல் _







மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வேனில் நேற்று இரவு வேளையில் கடத்தப்பட்டுள்ளார். ஜீவபுரம் சந்திவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா ஜெயசீலன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று இரவு வேளையில் வீட்டுக்கு வந்த சந்தேக நபர்கள் குறித்த நபருக்கு தொழில் பெற்று தருவதாகக் கூறி வேனில் கடத்தி சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்படி நபரின் குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment