நேற்று முன்தினம் வவுனியா பகுதியில் இடம்பெற்ற மிதிவெடி விபத்தில் கொல்லப்பட்டவர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் அமைப்பான கண்ணிவெடி நடவடிக்கைக்கான அமைப்பின் பயிற்சி ஆசிரியர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
நேற்று முன்தினம் (10) வவுனியா பகுதியில் கொல்லப்பட்டவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். அவர் எமது அமைப்பில் கண்ணிவெடி அகற்றும் பயிற்சி ஆசிரியராக கடமையாற்றியிருந்தார்.
எமது அமைப்பில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அவர் பயிற்சிகளை வழங்கியிருந்தார். கட்டுப்படுத்த முடியாத கண்ணிவெடி ஒன்றில் சிக்கி டெமிகின் மொறின் (54) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
மொறின் சிறப்பு பயிற்சி பெற்ற கண்ணிவெடி அகற்றும் நிபுணராவார். எனவே அவர் கண்ணிவெடியில் கொல்லப்பட்டது மிகவும் துன்பமானது. எமது அமைப்பை சேர்ந்த மேலும் இருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என அது மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment