Tuesday, May 4, 2010

பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல்







அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்தில் மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான நான்கு வருடக் காலத்தை ஒரு வருடத்தால் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இம் மானவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திலேயே இம் மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விகாரமகாதேவி பூங்காவருகில் ஆரம்பமான இந்த ஆர்பாட்ட பேரணி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கி சென்று கொண்டிருந்த போது இடை நடுவில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசிக்க முட்பட்டது. இதனை தொடர்ந்து பொலிசார் இதனை தடுத்த போது மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment