Tuesday, May 11, 2010

வானில் ஏற்றிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு மாணவி அடிகாயங்களுடன் ஆஸ்பத்திரியில்!



பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைச் சிலர், பல வந்தமாக வானில் ஏற்றி, தாக்கிய பின்னர் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது. இந்தச் சம்பவத்துடன் நான்கு பேர் சம் பந்தப்பட்டுள்ளனர் என்றும




பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைச் சிலர், பல வந்தமாக வானில் ஏற்றி, தாக்கிய பின்னர் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் நான்கு பேர் சம் பந்தப்பட்டுள்ளனர் என்றும், மாணவியின் வாயில் ஏதோ திராவகம் ஊற்றப்பட்டு, தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
மாணவி கூக்குரலிடவே பலமாகத் தாக்கப்பட்டதாகவும், அவ்வேளை அங்கு சிலர் கூடியதை அடுத்து அவரைத் தள்ளி விழுத்திவிட்டு வானில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சி மகளிர் கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பு மாணவியான சண்முகராஜா அனுஷியா (வயது 18) என்பவரே தாக்கப்பட்டு அடிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை 5 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தனிப்பட்ட பிரச்சினையா அல்லது கடத்தல் சம்பவமா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment