Tuesday, May 11, 2010

காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்மணி வல்லைவெளிப் பற்றைக்குள்! அவர் மீட்கப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில்



வல்லை வெளிப்பற்றைக்குள் காயங்களுடன் பெண்மணி ஒருவர் மயங்கிய நிலை யில் காணப்படுவதாக வழிப்போக்கர் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி


வல்லை வெளிப்பற்றைக்குள் காயங்களுடன் பெண்மணி ஒருவர் மயங்கிய நிலை யில் காணப்படுவதாக வழிப்போக்கர் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும் திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தில் கடத்தியதாகவும் பின்னர் வல்லைவெளிப் பற்றைக்குள் செவ்வாய்க்கிழமை காலையில் கண்விழித்தபோது கிடப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
தலைப்பகுதி; கழுத்து பிடரிப்பகுதிகளில் சிறிய கத்தியால் கீறப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
பெண்மணியின் உடலில் ஏற்பட்ட சிறுகாயங்கள் மற்றும் உபாதைகளினால் அவர் இயல்புநிலையில் காணப்படவில்லை என்றும், ஆனால் ஆபத்து ஏதுமில்லை என்றும் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் பெண்மணி கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் அவரின் பெயர் வி. லங்காதேவி (வயது 37) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment