Thursday, May 6, 2010

மானிப்பாயில் மாணவி ஒருவரைக் காணவில்லை படையினர் இரவிரவாக தேடுதல் நடத்தினர்



மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள விவேகா னந்தா வித்தியாசாலை மாணவியான பதி னொரு வயதுச் சிறுமியை நேற்று நண் பகலுக்குப் பின்னர் காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த நகுலேஸ்வரம் ரேணுகா (வயது 11) என்ற மாணவியையே காணவில்லை.
இதுபற்றி கூறப்படுவதாவது:
நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற
பிரஸ்தாப மாணவி, பாடசாலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாதததை அடுத்து தாயார் தேடிச் சென்றதாகவும் அவ ரைக் காணததையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யததாகவும் தெரிவிக் கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து பெரும் எண் ணிக்கையான படையினர் மானிப்பாய் பகுதியில் குவிக்கப்பட்டு நேற்றிரவு வரை தேடுதல் இடம்பெற்றது.
சிறுமியின் தந்தை வழக்கு ஒன்றில் சம் பந்தப்பட்டுச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் குடும்பம் வசதிகள் குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment