Thursday, May 6, 2010

மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்து அகற்றப்படும்: கோட்டபாய



வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவுத் தூபிகளும் இடித்து அகற்றப்படும் என்று பாதூப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது உயிரிழந்த படையினருக்கான நினைவு தூபிகள் அனைத்து பகுதிகளிலும் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட படையினரின் நினைவு தூபியை திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போhதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சிங்கள பௌத்த சின்னங்களை அமைத்து இலங்கையின் சிங்கள தேசமா மாற்றும் நோக்கிலேயே நர அபிவிருத்தி அதிர சபையானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment