நெல்லியடியில் படப்பிடிப்பு நிலையம் ஒன்றை இன்று திறக்கவிருந்த இளைஞன் நேற்றிரவு 7 மணியளவில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தும்பளை, தம்புருவளையைச் சேர்ந்த மகாலிங்கம் சதீசன் (வயது 25) என்ற இளைஞரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
இச் சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது:
நெல்லியடி பருத்தித்துறை வீதியில் செலிங்கோ காப்புறுதி நிறுவன கிளைக்கு முன்பாக படப்பிடிப்பு நிலையம் (ஸ்ரூடியோ) ஒன்றை இன்று திறப்பதற்காக கடையொன்றில் சமய நிகழ்ச்சியில் இந்த இளைஞன் நேற்றிரவு ஈடுபட்டிருந்தார்.
அந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது பெயரைக் கூறி வெளியே அழைத்ததாகவும் வெளியே வந்த சதீசனை சுட்டுவிட்டு அவர்கள் தப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Monday, May 3, 2010
படப்பிடிப்பு நிலையத்தைத் திறக்கவிருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நெல்லியடியில் சுட்டுக்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment