Monday, May 3, 2010

குடாநாட்டில் மா, பாண் விலைகள்: இன்று அறிவிப்பு




குடாநாட்டில் கோதுமை மா, பாண் மற் றும் அதுபோன்ற உற்பத்திப் பொருள்களின் புதிய விலை விவரம் இன்று அறிவிக்கப்பட விருக்கின்றது.
யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் இத் தக வலை நேற்றிரவு தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவின் விலை மூன்று ரூபாவால் அதி கரிக்கப்பட்டதன் எதிரொலியாக பாணின் விலை ஒருரூபாவால் அதிகரிக்கப்படுவ தாக கொழும்பில் அறிவிக்கப்பட்டிரு ந்தது.
இது தொடர்பாக யாழ். அரச அதிப ருடன் தொடர்புகொண்டு கேட்டபோது
புதிய விலை விவரங்கள் தொடர்பாக இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
புதிய விலைவிவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment