Tuesday, May 4, 2010

நாடாளுமன்ற வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய இளம் எம்.பிக்கள்



முதல் தடவையாக நாடளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை நாடாளுமன்ற மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

முதல் தடவையாக நாடளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை நாடாளுமன்ற மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜ பக்ஸ, துமிந்த சில்வா, கனகா ஹேரத், உத்தித் லொகுபண்டார மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.ஸ்ரீ ரங்கா ஆகியோர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை அவதானித்த சிலர், மக்களுக்குச் சேவை செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற இவர்கள், மக்கள் மீது கவனம் செலுத்தாமல், தற்போதும் கூட சாதாரன மகன் போன்று கிரிக்கெட் விளையாடுகின்றனரே என்றவாறு கூறிச் சென்றனர்.

No comments:

Post a Comment