Thursday, June 3, 2010

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் ஆயுதக்கும்பல் ஒன்று வீட்டில் புகுந்து கொள்ளை


கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் மீள்குடியேறிய மக்களிடம் முகமூடி அணிந்த ஆயுதக் கும்பல் ஒன்று கத்தியைக் காட்டி நகைகள் மற்றும் பணத்தை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொர்பிலும் மேலும் தெரியவருவதாவது:

கடந்த வாரம் அம்பாள்குளம் பகுதியில் வீடு ஒன்றினுள் வாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் முகமூடி அணிந்த நிலையில் புகுந்த ஆயுததாரிகள் அந்த வீட்டில் இருந்த குடும்பத்தலைவரின் தலையில் சுத்தியலால் தாக்கிய பின்னர் அவரது வாயை மூடிக் கட்டியுள்ளனர்.

அங்கிருந்த அனைவரின் வாய்களையும் கட்டியுள்ளனர்அதன் பின்னர் அந்தவீட்டுப் பெண்ணின் தலையில் கத்திப்பிடியால் தாக்கி அங்கிருந்த அனைத்து நகைகள், பணம் என்பனவற்றை முழுமையாக சூறையாடிச் சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்த மூதாட்டிக்கு வெளிநாட்டில் இருந்து உறவினர்களால் அனுப்பப்பட்டிருந்த 40ஆயிரம் ரூபா பணம் சம்பவம் நடைபெற்ற நாள் அன்றே வங்கியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான குடும்பத் தலைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவரிடம் சம்பவம் தெடர்பிலான முறைப்பாட்டினை அங்கிருந்த சிறீலங்கா பொலிஸார் பெறவில்லை என்பதுடன் கிளிநொச்சி சிறீலங்கா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டினை பொலிஸார் பெறவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இராணுவத்துணைக்குழுக்கள் செயற்படுவதாகவும், அவர்களே இப்படிச் செய்ததாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment