Thursday, June 3, 2010

முல்லைத்தீவு சிங்கள மயமாகிறது! அரச அதிபராக மேஜர் ஜெனரல்!! இமெல்டா மாகாண சபைக்கு மாற்றம்!!!

முழுமையாக தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்ற முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சீ.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தினை முழுமையான சிங்களமயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிஓயா, பதவியா, மகாவலி எச் வலயம் என்பவற்றை உள்ளடக்கியதாக வன்னியில் அனைத்துப் பகுதியினையும் சிங்களமயமாக்கும் நோக்கிலேயே இந்நடவடிகை மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரை மாற்றலாக்கி அவருக்கு வட மாகாணசபையின் பிரதம செயலர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழ் அரச அதிபர்களில் தகுதி நிலை அடிப்படையில் முன்னிலையில் உள்ள இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகுவதற்கு தயாராக இருந்தாகவும் ஆனாலும் அவருக்கு அந்தப் பதவியினை வழங்காமல் ஏற்கனவே ஓய்வு பெற்றிருக்கவேண்டிய கே.கணேசுக்கு யாழ்.மாவட்ட அரச அதிபராக மேலும் ஒரு ஆண்டுக்கான பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தினை சிங்களமயமாக்கும் நோக்கில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை தமக்குத் தருமாறு அரசதரப்பும், படைத்துறையினரும் நிர்பந்தித்துவருவதால் முல்லைத்தீவின் துணுக்காய் தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேச செயலர்களும் தமக்கு உடனடியான மாற்றல் தருமாறு விண்ணப்பித்துள்ளதாகவும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment